மரங்களில்...
இலைகள்,
மலர்கள்,
காய்கள் மட்டுமல்ல...
தளிர்வது,முற்களும்
தான்!
வாசம் தான் முகவரி என்றால்,
ஊமை மரங்கள் பாவம்.
மொட்டுவிடா வாழ்க்கை கொண்ட
ஜீவன் பெற்றதா சாபம்?
மரங்களே!மரங்களே!
முற்களுக்குள் சிக்கிக்கொண்ட
ரோஜா மலரைக் கேளும்!
மெல்லியவள் ,மேனி குத்த
எத்தி நிற்கும் முற்கள்!
எங்கிருந்தோ எட்டி நிற்கும்
சுடுகதிரன் ஈட்டி வெயில்!
சொட்டுச் சொட்டாய் குளிர் பனியின்
தொடுகை தரும் மெளன வதை!
மலர்கள் மட்டும் குரல் கொண்டால்,
உலகே வன்மிக்க மறந்திருக்கும்.
மரணிக்கும் ஒவ்வொரு மலரும்,
அநியாயக் கொலைகள் தானோ?
Comments
Post a Comment